ஐயா என்றழைக்கவா பூதநாதா
என்றழைக்கவா
சாஸ்தா என்றழைக்கவா மணிகண்டா
என்றழைக்கவா
எப்படி அழைப்பேன் உன்னை எங்கே
காண்பேன்
ஏறாத மலையெல்லாம் ஏறி வந்தேன்
அப்பா
ஏழை பங்காளன் உன்னை தேடி வந்தேன்
அப்பா
நெய்யுடன் மெய்யோடூ நானும்
வருவேன் அப்பா
சபரிமலை நாடி நானும் வருவேன் அப்பா
ஐயா என்றழைக்கவா…
இருமுடிதனை தாங்கி நானும் வருவேன்
அப்பா
இன்பமுடன் பேட்டை துள்ளி ஆடி
வருவேன் அப்பா
மகர விளக்கன்று காண வருவேன் அப்பா
மங்களமாம் வாழ்வளித்து அருள்வாயப்பா
ஐயா என்றழைக்கவா…
– சரணம் ஐயப்பா –