அடியவர் மனம் எனும் ஊஞ்சலிலே ஆட
அன்புடனே நீ விரைந்தோடி வாராய்
வாராய்…ஐயனே வாராய்
அச்சன்கோவில் தன்னில் அழகுறவே
வீற்றிருக்கும்
அரசனே நீ என்னை காக்கவே வாராய்
ஆரியங்காவில் ஓர் சூரியன் போல் ஒளிரும்
இறைவனே நீ எமை ரக்ஷிக்க வாராய்
வாராய்…ஸ்வாமியே வாராய்…
குளத்துப்புழை தன்னில் நிலவெனவே ஒளி
வீசும்
குழந்தையே எமை காக்க நீ ஓடி வாராய்
எழில்மிகு எரிமேலி தனில் வாழும்
சாஸ்தாவே
எமை காக்க அன்புடனே நீ ஓடி வாராய்
வாராய்…மணிகண்டனே வாராய்…
காந்த மலைதனில் ஜோதி ஸ்வரூபமாய்
காட்சி அளித்திடும் ஐயனே வாராய்
சபரிகிரி தன்னில் சாந்த ஸ்வரூபமாய்
அமர்ந்திருக்கும் அழகு ஐயனே வாராய்
வாராய்….அழகனே வாராய்…
வாராய்…இங்கு நீ வாராய்…
– சரணம் ஐயப்பா –