செந்தூர பொட்டு அழகு
உனக்கு சிங்கார பட்டு அழகு
நீகை ஏந்தும் சூலம் அழகு
உனக்கு நான் ஏத்தும் சூடம் அழகு
முத்து பொன்னோடு வைரமும்
அலங்காரமானதும்
தாயாரின் சிரிப்பழகு
அந்த மூக்குத்தி பேரழகு
செந்தூர பொட்டு…
உலகாளும் காளியே எனை ஆளும் மாரியே,
ஜகத்ஜால மகமாயியே
தேரோடும் வீதியில் நான் ஓடி வருகிறேன்
நில்லேண்டி மாரியம்மா
கற்பூரம் காட்டியே, கை ஏந்தி வணங்கியே,
(பின்பாட்டு பாட வேண்டாம்)
கண்ணார கண்டேனம்மா… உனை கண்ணார
கண்டேனம்மா
செந்தூர பொட்டு…
அம்மனுக்கு திருவிழா, ஆண்டுக்கு ஒருவிழா
தினந்தோறும் திருநாள்அம்மா
கரகாட்டம் நடக்குது, தெருக்கூத்தும்
நடக்குது, ஊரெல்லாம் ஒண்ணா கூடுது
ஊரெல்லாம் கூடியே ஆத்தாவின் அழகினை
பெருமையாக கூடி பேசுது, பின்ன நிம்மதியா
வீடு சேருது
செந்தூர பொட்டு…
முத்து பொன்னோடு வைரமும்
அலங்காரமானதும்
தாயாரின் சிரிப்பழகு
அந்த மூக்குத்தி பேரழகு
செந்தூர பொட்டு…
– சரணம் ஐயப்பா –